வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் நிதி :

வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு கூடுதல் நிதி :
Updated on
1 min read

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன் றியத்துக்கு உட்பட்ட எழுமேடு ஊராட்சி அலுவலகத்தில் வீடு வழங்கும் திட்ட பயனாளிகள் சந்திப்புக் கூட்டம் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சங்கர் கலந்து கொண்டு எழுமேடு ஊராட்சியில் கட்டி முடிக்கப்படாத நிலுவை யில் உள்ள வீடுகளை விரைந்து முடிக்க வேண்டும்.பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு கூடுதல் நிதியாக ரூ.70 ஆயிரம்வழங்கப்படுகிறது என்று கூறினார். வீடு கட்டும் திட்ட பயனாளிகள் விவரத்தை தெரிவித்து அதற் கான ஒப்புதலை அவர்களிடம் பெற்றார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், பஞ்சாயத்து தலைவர் ரஞ்சித்குமார், துணைத்தலைவர் ராஜசேகரன், ஊராட்சி செயலாளர் அன்பு வேல் மற்றும் ஊராட்சி உறுப் பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in