திருச்சியில் வரும் 26-ம் தேதி முதல் காவலர் உடற்தகுதி தேர்வு :

திருச்சியில் வரும் 26-ம் தேதி முதல் காவலர் உடற்தகுதி தேர்வு :
Updated on
1 min read

திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ.அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிச.13-ம் தேதி நடைபெற்றது.

இத்தேர்வில் வெற்றி பெற்ற 2,204 ஆண்கள், 1,005 பெண்கள், 1 திருநங்கை என 3,210 பேருக்கு வரும் 26-ம் தேதி முதல் ஆக.5-ம் தேதி வரை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு (ஆண்கள் 1,500 மீ தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும், பெண்கள் மற்றும் திருநங்கைகள் 400 மீ தூரத்தை 2 நிமிடம் 30 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்) நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்வு மேன்பட்ட ஆய்வு அதிகாரியும், மாநகர காவல் ஆணையருமான ஏ.அருண், தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக் குழுவின் தலைவரும், மாவட்ட எஸ்.பி.யுமான பா.மூர்த்தி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in