Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM

வீரசோழனில் போலி மருத்துவர் கைது :

விருதுநகர் மாவட்டம், வீர சோழனில் போலி மருத்து வர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், நரிக் குடி வட்டார மருத்துவராக ரெங் கசாமி என்பவர் பணிபுரிகிறார். இவருக்கு, வீரசோழனில் மருத்துவம் படிக்காத நபர் ஒருவர் அலோபதி சிகிச்சை அளிப்பதாகத் தெரியவந்தது.

அதையடுத்து, அக்குறிப்பிட்ட நபரின் வீட்டுக்குச் சென்று மருத்துவ அலுவலர் ரெங்கசாமி சோதனை நடத்தினார். அப் போது, பஞ்சாட்சரம் (63) என்பவர் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதும், அவர் அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து, வீரசோழன் காவல் நிலையத்தில் மருத்துவ அலுவலர் ரெங்கசாமி புகார் அளித்தார். அதன்பேரில், போலி மருத்துவர் பஞ்சாட்சரத்தை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x