Published : 21 Jul 2021 03:16 AM
Last Updated : 21 Jul 2021 03:16 AM

தாயை கொலை செய்த வழக்கில் - 3 ஆண்டுகளுக்கு பின்னர் மகன் உட்பட இருவர் கைது :

தாயை கொலை செய்த மகன் உள்பட இருவரை திருச்செங்கோடு நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

திருச்செங்கோடு அருகே ஆனங்கூர் பட்டணத்து மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ராஜலட்சுமி (49) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜலட்சுமியின் மகன் வெங்கடேசன் (27) மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் (32) ஆகியோர் சீதாராம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் முன்பு சரணடைந்தனர். இருவரையும் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாயார் ராஜலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்ததை வெங்கடேசன் ஒப்புக் கொண்டார். இதற்கு பிரபாகரன் உடந்தையாக இருந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x