Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

திருச்செங்கோட்டில் மின்வாரிய ஊழியர்கள் - மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி ஆர்ப்பாட்டம் :

மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி திருச்செங்கோடு கீழேரிப்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மின்வாரிய ஊழியர்கள் சங்கத்தின் திருச்செங்கோடு செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மின்சார சட்டத்திருத்த மசோதா 2021 என்ற சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சட்டம் அமல்படுத்தினால் தனியாருக்கு மின் வாரியத்தை தாரைவார்க்கும் போக்கு ஏற்படும்.

பொதுத்துறை நிறுவனமான மின்வாரியத்தை மாநில அரசுப் பட்டியலில் இருந்து மத்திய அரசுப் பட்டியலுக்கு கொண்டு சென்றால் அது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக அமையும். எனவே, இந்தமசோதாவை திரும்பப்பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x