சிறுமி பலாத்கார வழக்கில் - இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை :

சிறுமி பலாத்கார வழக்கில் -  இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை :
Updated on
1 min read

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள கோவிலான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்(22). இவர், கடந்த 2019-ம் ஆண்டு 14 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு திருவாரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுந்தர்ராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அரவிந்த்க்கு 32 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in