மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.
தென்காசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.
Updated on
1 min read

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மின் மசோதா சட்டத் திருத்தத்தை தாக்கல் செய்ய முயற்சிப்பதைக் கண்டித்து தென்காசி மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளர் முன்னேற்ற சங்க தென்காசி கோட்டச் செயலாளர் பெத்தேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் அயுப்கான் கண்டன உரையாற்றினார்.

இதேபோல், ஆய்க்குடி பிரிவு அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு கோட்டத் தலைவர் ஸ்டீபன் மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in