Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM

கோயில்களில் பாதுகாப்பு பணியிடம் முன்னாள் ராணுவத்தினருக்கு அழைப்பு :

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கோயில் பாதுகாப்பு பணியிடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 12 கோயில் பாதுகாப்பு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன்படி புதுச்சத்திரம் அழியா இலங்கையம்மன் கோயில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோயில், அலவாய்ப்பட்டி ஏகாம்பரேஸ்வரர் (ம) பாலசுப்ரமணியர் கோயில், வெண்ணந்தூரில் உள்ள அத்தனுா் அம்மன் கோயில், ஆர். புதுப்பட்டி துலுக்க சூடாமணியம்மன் கோயில், காளிப்பட்டி கந்தசாமி கோயில், மோலிப்பள்ளி அண்ணமார் சுவாமி கோயில், திருச்செங்கோடு ஒக்கிலிப்பட்டி மாரியம்மன் கோயில், மொளசி முக்கனீஸ்வரர் கோயில், மொளசி வெங்கடேச பெருமாள் கோயில், விட்டம்பாளையம் இளைய பெருமாள் கோயில், பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயில்களில் தலா 1 பாதுகாப்பு பணியிடம் காலியாக உள்ளது.

இங்கு பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x