Published : 18 Jul 2021 03:16 AM
Last Updated : 18 Jul 2021 03:16 AM

2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீழ்கரிப்பூர் கிராமம் அருகே மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தியபோது, வாகனத்தில் ஓட்டி வந்த ஓட்டுநர் உட்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர், வாகனத்தை சோதனையிட்ட போது இரண்டரை டன் ரேஷன் அரிசி (50 மூட்டைகள்) இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. நியாயவிலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை முறைகேடாக பெற்று வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x