பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

கரூர் காமராஜ் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.ராஜா தலைமை வகித்தார். செயலாளர் ஜி.கார்த்திகேயன், உதவிச் செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியம் பேசினர்.

என்எப்டிஇ தலைவர் ஏ.அப்பாஸ்மந்திரி வரவேற்றார். அனைந்திந்திய சங்க நிர்வாகிகள் வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஆர்.கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பி.சக்திவேல் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், 4 ஜி சேவையை உடனே தொடங்க வேண்டும். 5ஜி சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கும்பகோணத்தில்...

இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் ராமச்சந்திரன், மணிகண்டன், கிருஷ்ணன், பாலாஜிபிரபு செந்தில் முருகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in