வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது :

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது :
Updated on
1 min read

வேலூரில் தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறித்துச் சென்ற இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன்(35). சுமை தூக்கும் தொழிலாளி. இவர், நேற்று காலை வேலைக்கு செல்ல வேலூர் மண்டித் தெரு வழியாக நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியாக வந்த ஓல்டுடவுன் தோல்கிடங்கு தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பவர், கத்தியை காட்டி மிரட்டி ஐயப்பனிடம் இருந்து ரூ.1,500 பணத்தை பறித்துக்கொண்டு தப்பி யோடினார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் நேற்று சதீஷ்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மீது காட்பாடி, விருதம்பட்டு, வேலூர் தெற்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in