அரியலூரிலிருந்து - 1,000 டன் நெல் கிருஷ்ணகிரிக்கு ரயில் மூலம் அனுப்பிவைப்பு :

அரியலூரிலிருந்து  -  1,000 டன் நெல் கிருஷ்ணகிரிக்கு ரயில் மூலம் அனுப்பிவைப்பு :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் ஆகிய‌ பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

இதில், 1,000 டன் நெல் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து தனி சரக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அரைவைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து, 3,4 நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் உள்ள 4,000 டன் நெல் மூட்டைகளும் தனி சரக்கு ரயில் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அனுப்பப்படவுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in