Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் பணம், நகை திருட்டு :

இந்நிலையில், சுந்தரம் வீட்டின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த ரூ.5.05 லட்சம் தொகை, 16 பவுன் நகை மற்றும் 3 டி.விக்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிக்கொண்டு, வீட்டின் முன் நின்ற காரை எடுத்துக்கொண்டு தப்பினர். பீளமேடு விமான நிலையம் அருகே காரை நிறுத்திச் சென்றுள்ளனர். கடந்த 10-ம் தேதி கார் கேட்பாரற்று நிற்பது பற்றி, சுந்தரத்துக்கு சிங்காநல்லூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவை திரும்பியதையடுத்து, வீட்டில் திருடு போன விவரம் தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில், வடவள்ளி போலீஸார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x