Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஜமீன் ஊத்துக்குளியில் உள்ளகிருஷ்ணாகுளத்தில் கலக்கிறது. நகர எல்லைப் பகுதியான பொட்டுமேட்டில் ஆரம்பிக்கும் சாக்கடை கால்வாய் மரப்பேட்டை வீதி, நேருநகர், கண்ணப்பன் நகர் வழியாக ஜமீன்ஊத்துக்குளி பாலத்தை கடந்து கிருஷ்ணாகுளத்தை சென்றடைகிறது.
இந்த சாக்கடை கால்வாய் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமலும், ஆழப்படுத்தாம லும் இருப்பதால், அதில் நாளுக்கு நாள் கழிவுப் பொருட்கள் தேங்கி துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்துவருவதால், சாக்கடை கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து வரும்போது, அருகில்உள்ள வீடுகளில் புக வாய்ப்புள் ளது. எனவே, கால்வாயை தூர்வாரும் பணி நேற்று நடைபெற்றது. இதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT