Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
சேலம்: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, சேலம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது.
சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் பாஸ்கர் தலைமையில், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் இருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது.
இதேபோல, அம்மாபேட்டை உழவர் சந்தையில் இருந்து தொடங்கிய பேரணிக்கு, பொதுச் செயலாளர் ராஜகணபதி தலைமை வகித்தார். பொன்னம்மாப்பேட்டையில் வர்த்தகப் பிரிவு தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். 3 இடங்களில் இருந்து தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. அங்கு திரண்ட காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT