Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
விருதுநகர் மாவட்டம், வில்லி புத்தூர் அருகே உள்ள புது சென்னாகுளத்தை் சேர்ந்தவர் ரமேஷ். வெளிநாட்டில் பணிபுரி கிறார். 2 மாத விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண் டிருந்தார். அப்போது வீட்டினுள் ஆள் நடமாடும் சத்தம் கேட்டது.
ரமேஷ் எழுந்துசென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்துத் தப்பியோடினார். இதையடுத்து பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந் தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT