தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி - இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் :

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி -  இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தற்போது இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் கல்விக் கட்டணத்தில் 75 சதவீதத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்பள்ளி நிர்வாகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in