Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
மதுரையில் குழந்தை விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்ப கத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரிடம் வழக் கறிஞர்கள் மனு அளித்தனர்.
மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் மற்றும் சார்பு நீதிபதியான வி.தீபாவிடம், வழக்கறிஞர்கள் முத்துக்குமார், அர்ச்சனாதேவி, ராஜேஸ்வரி, சட்டக்கல்லூரி மாணவிகள் காயத் திரி, கார்த்திகா மணி, திவ்யா மற்றும் ஜெயா அழகேசன் ஆகி யோர் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்ததாக இதயம் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவகுமார், மதர்ஷா, கலைவாணி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அறக்கட்டளை கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் காப்பகத்தில் தங்கி யிருந்த 26 முதியவர்கள் உடல் நலக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வேறு காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மீண்டும் இதயம் காப்பகத்துக்குத்தான் செல்கிறோம் என நினைத்து, அங்கு வர மறுத்து, காப்பகத்தில் இருந்தவர்கள் தங்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும், தங்களுக்கு வந்த வீட்டு வாடகை மற்றும் ஓய்வூதியத்தை அபகரித்துக் கொண்டதாகவும் புகார் தெரிவித்தனர்.
இதனால் இதயம் அறக்கட்ட ளையின் பதிவை ரத்து செய்யவும், முதியவர்களிடம் இருந்து வாங்கப் பட்ட பணம் மற்றும் உடைமைகளை திரும்ப வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை மேல் நட வடிக்கைக்காக அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி தெரி வித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT