Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தற்போது மாவட்ட நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அரசு வழக்கறிஞர்களாக தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.
2017-ம் ஆண்டின் விதிமுறைகளின் அடிப் படையில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தை மேற்கொள்ளவும், நியமனம் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், அரசு வழக்கறிஞர்கள் நியமன விதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் 2 லட்சம் பேர் விண்ணப்பித்தால் எந்த அடிப்படையில் அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்படுவர் எனக் கேள்வி எழுப்பினர். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், தலைமை அரசு வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து விசாரணையை ஜூலை 20-க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT