Published : 13 Jul 2021 03:15 AM
Last Updated : 13 Jul 2021 03:15 AM
திருச்சி: திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் கே.கே.நகரிலுள்ள ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையர் அருண் முகாமை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற காவலர்கள், அமைச்சு பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவர் முகமது ஹக்கீம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் தடுப்பூசி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT