மது விற்றதாக 6 பேர் கைது :

மது விற்றதாக  6 பேர் கைது :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் எஸ்.பியின் தனிப்படை போலீஸாரும், லால்குடி போலீஸாரும் அப்பகுதிகளில் சோதனையிட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்றதாக அன்பில் மெசின் தெருவைச் சேர்ந்த அய்யாக்கண்ணு (40), பட்டித்தெருவைச் சேர்ந்த பழனிசாமி(52), சிறுதையூர் அண்ணாநகரைச் சேர்ந்த ஆர்த்திராஜன் மனைவி லீமா (48), நஞ்சை சங்கேந்தி காலனி தெருவைச் சேர்ந்த பாக்கியராஜ் மனைவி தீபா (30), ஆனந்தராஜ் மனைவி செல்வராணி (27), காட்டூர் சப்பாணி காலனியைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி சாந்தி (48) ஆகியோரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in