Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு :

திருவண்ணாமலை: வந்தவாசியில் கூலி தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரம் சேத்துப்பட்டு சாலை கம்பன் நகர் பகுதியில் வசிப்பவர் கூலி தொழிலாளி கார்த்திக். இவர், நேற்று முன் தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் திருப்பூர் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டின் கதவு திறந்திருப்பது நேற்று காலை தெரியவந்தது. இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது, வீட்டில் இருந்த 12 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போனதை உறவினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

மேலும், அதே பகுதியில் 4 வீடுகளில் திருட்டு முயற்சியும் நடைபெற்றுள்ளது. இது குறித்து வந்தவாசி தெற்கு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x