Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

வாணியம்பாடி அருகே - வனப்பகுதியில் சிறுவன் உயிரிழப்பு :

வாணியம்பாடி அருகே ஆடு மேய்க்கச்சென்ற சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி அடுத்த சொரக்காயல் நத்தம், நாயுடு வட்டத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஆனந்தன்(48). இவரது மகன் பிரசாந்த் (16). பள்ளிகள் திறக்காததால் வீட்டில் சிறு, சிறு வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில், பிரசாந்த் அருகேயுள்ள குட்டைப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். காலையில் ஆடுகளை ஓட்டிச்செல்லும் பிரசாந்த் மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற பிரசாந்த் அன்று மாலை வீடு திரும்பவில்லை. மாறாக, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மட்டும் வீடு திரும்பின.

இதனால், சந்தேகமடைந்த ஆனந்தன் மற்றும் குடும்பத்தார் அருகேயுள்ள குட்டைப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு பெரிய பாறைக்கு கீழே ரத்த வெள்ளத்தில் பிரசாந்த் உயிரிழந்து கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் திம்மாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத் தனர். அதன்பேரில், அங்கு வந்த காவல் துறையினர் பிரசாந்த் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திம்மாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரசாந்த் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பாறை மீதிருந்து கீழே விழுந்து காயமடைந்து உயிரி ழந்தாரா? என்ற கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x