Published : 13 Jul 2021 03:16 AM
Last Updated : 13 Jul 2021 03:16 AM

மதுபானம் விற்ற மூதாட்டி உட்பட 2 பேர் கைது :

ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனை அதிகரித்து வருவதாக வந்த தகவலின் பேரில், எஸ்பி தனிப்படை காவல் துறையினர் மிட்டாளம், மாதனூர், மாச்சம்பட்டு, குளிதிகை, கீழ்முருங்கை, ரங்கசமுத்திரம், உமராபாத் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த குணவதி (65) என்பவர் தனது வீட்டில் வெளிமாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அதேபோல, ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரும் வெளிமாநில மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவது கண்டறியப்பட்டது. அதன்பேரில், 2 பேரையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 89 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராயம் விற்ற பெண் கைது

வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஏரிக்கொல்லை வட்டம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சினி(32) என்பவர் தனது வீட்டில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை எஸ்பி தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 260 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x