விழுப்புரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது :

விழுப்புரத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது :
Updated on
1 min read

விழுப்புரத்தில் கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்

விக்கிரவாண்டியை அடுத்த நங்காத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நீர்த்தமலை என்பவர் மீது கஞ்சனூர் காவல் நிலையத்தில் கடந்த 2014-ம் வருடம் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அன்று முதல் தொடர்ந்து நீர்த்தமலை தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

அவரை விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா பாராட்டு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in