Published : 12 Jul 2021 03:15 AM
Last Updated : 12 Jul 2021 03:15 AM

தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் திருட்டு :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரம் கஸ்தூரிபாய் தெருவில் வசிப்பவர் பானுகோபன்(75). தனியார் பேருந்து உரிமையாளர். இவரது மனைவி ஷோபனா(65). இவர்கள் இருவரும், வேலூரில் வசிக்கும் மகன் பிரகாஷ் வீட்டுக்கு கடந்த 9-ம் தேதி சென்றுள்ளனர். இந்நிலையில், பூட்டியிருந்த அவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பது நேற்று காலை தெரியவந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதற்கிடையில், வேலூரில் இருந்து பானுகோபன் வரவழைக்கப்பட்டு பொருட்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது, பீரோவில் இருந்த ரூ.84,500 ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x