Published : 11 Jul 2021 03:15 AM
Last Updated : 11 Jul 2021 03:15 AM

குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேர் கைது :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் வழுதலங்குளம் கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசிக்கும் ஜெகநாதன்(55), செய்யாறு வட்டம் புளியரம்பாக்கம் கிராமம் கம்மாவர் தெருவில் வசிக்கும் விஜயகுமார்(38), வெம்பாக்கம் வட்டம் சுருட்டல் கிராமம் ரோட்டுத் தெருவில் வசிக்கும் மணி(61) ஆகியோர் சாராயம் விற்பனை செய்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு கிளை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் பசுவங்கரனை கிராமம் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் கோபிநாதன்(27) என்பவர் தி.மலை மாவட்டம் செய்யாறு சுகநதி ஆற்றில் இருந்து மணல் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களது நடவடிக்கையை தடுக்கும் வகையில், தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x