Regional01
மண்வள மேலாண்மை பயிற்சி :
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூர் வட்டம் திருவாசி கிராமத்தில் மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
ஊராட்சித் தலைவர் பானுமதி முருகேசன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் தாகூர், மண்வளத்தை காக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரித்தார்.
வேளாண்மை அலுவலர்கள் (மண் ஆய்வகம்) புவனேஸ்வரி, உமாமகேஸ்வரி, துணை வேளாண்மை அலுவலர் சின்ன பாண்டி, உதவி வேளாண்மை அலுவலர் பார்த்திபன் ஆகியோர் பேசினர்.
