திருப்பத்தூரில் லாட்டரி விற்ற இருவர் கைது :

திருப்பத்தூரில் லாட்டரி  விற்ற இருவர் கைது :
Updated on
1 min read

திருப்பத்தூர் நகர் பகுதிகளில் வெளி மாநில லாட்டரி விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி தனிப்படை காவல் துறையினர் திருப்பத்தூர் பேருந்து நிலையம், கவுதம்பேட்டை, சிவராஜ் பேட்டை, சின்னக்கடை தெரு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, காமராஜ் நகர், புதுப்பேட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, புதிய பேருந்து நிலையத்தையொட்டியுள்ள ஒரு கடையில் ஆதிசக்தி நகரைச் சேர்ந்த சிவராஜ் (44), கவுதம்பேட்டையைச் சேர்ந்த ரஜினி (30) ஆகிய 2 பேரும் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in