Published : 09 Jul 2021 03:14 AM
Last Updated : 09 Jul 2021 03:14 AM

மேல்மலையனூர் கோயிலில் இன்று தரிசனத்திற்கு மட்டும் அனுமதி :

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் செயல் அலுவலர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பெருந்தொற்று காரணத்தினால் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இன்று ( ஜூலை 9) வெள்ளிக்கிழமை) அமாவாசை யன்று மேல்மலையனூர் அங்கா ளம்மன் கோயிலில் நடைபெற இருந்த ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

ஆனால் கோயிலில் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x