செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் :

செல்போன் டவர்  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் :
Updated on
1 min read

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 58-வது வார்டு வசந்தபுரம் பர்மா காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்றில் செல்போன் டவர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய கட்டிடத்தில் செல்போன் டவர் அமைத்தால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதால் அங்கு செல்போன் டவர் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, இது தொடர்பாக செல் போன் நிறுவனத்தாரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்தனர்.இதைத்தொடர்ந்து, போராட் டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in