வேனில் கடத்தி செல்லப்பட்ட - வெடி பொருட்கள் பறிமுதல் :

வேனில் கடத்தி செல்லப்பட்ட -  வெடி பொருட்கள் பறிமுதல் :
Updated on
1 min read

விருதுநகர் அருகே சட்ட விரோதமாக வேனில் கடத்திச் செல்லப்பட்ட வெடிபொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் அருகே கோவிந் தநல்லூர்-சதானந்தபுரம் சாலையில் வச்சக்காரப்பட்டி போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீஸார் சோதனையிட்டபோது அதில் சட்ட விரோதமாக பட்டாசு கருந்திரி மற்றும் 50 கிலோ வெடி உப்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டன.

இதுதொடர்பாக, வச்சக்காரப் பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து பட்டாசு திரி மற்றும் வெடி உப்பு போன்றவற்றையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாக னத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் வெடிபொருட்களை கடத்தி வந்த ஓ.கோவில்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (58), விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கோபிநாத் (41) ஆகியோரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in