

அஞ்சல் குறை தீர்வு முகாம் சென்னை முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெற வுள்ளது என திருப்பத்தூர் அஞ்சலக்கோட்ட கண்காணிப்பாளர் மாதேஷ் வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அஞ்சலக வாடிக்கையாளர்களின் குறைகளுக்கு தீர்வு காண சென்னை அண்ணா சாலையில் உள்ள முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு அஞ்சல் வட்ட அளவிலான ‘அஞ்சல் குறை தீர்வு முகாம்’ நடைபெற உள்ளது.
எனவே, அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களது புகார் மனுக்களை முழு விவரங்களுடன் எழுதி ‘‘Smt. M. Vijayalakshmi, Assistant Director, (SB