Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

கூடுவெளி, அரகண்டநல்லூர் - அரசு பாலிடெக்னிக்கில் மாணவர்கள் சேர்க்கை : 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

கடலூர்/விழுப்புரம்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் வட்டம் கூடுவெளி, விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஆகிய அரசுபாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகின்றன என்று அந்தந்தகல்லூரி முதல்வர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புகளில் தெரிவித்துள்ளனர்.

முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடபெற உள்ளது. கட்டிட அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், கணினி பொறியியல் ஆகிய துறைகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு சேர்க்கையும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைபெறும்.

10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்களது 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். www.tngptc.in, tngpt.com ஆகிய இணைய தளம் வழியாக ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர் களுக்கு கல்லூரியில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவுகளைத் தவிர்த்து பிற பிரிவினர்களுக்கு ரூ.150 செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கூடுவெளி பாலிடெக்னிக்கிற்கு 04144-238233, 9342202552 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

அரகண்டநல்லூர் பாலிடெக் னிக்கிற்கு 94427 36992, 95852 99529, 80987 35554 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x