Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM

கீழக்கரையில் கூலித் தொழிலாளி மர்ம கொலை :

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக் கரையில் கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கீழக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த செய்யது அப்துல் கபீர் மகன் ரிஸ்வான் (44). இவருக்குத் திருமணம் ஆகவில்லை. ரிஸ்வான் கூலித் தொழிலாளி. அவருக்கு போதைப் பழக்கமும் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை அவர் வசித்த வீட்டில் மர்மமான முறையில் வயிற்றில் கத்திக் குத்து காயங்களுடன் ரிஸ்வான் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

கீழக்கரை போலீஸார் சென்று அவரது உடலைக் கைப்பற்றி கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x