குறைதீர் கூட்டங்களை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் :

குறைதீர் கூட்டங்களை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று துண்டு ஏந்தி பிச்சை எடுப்பதாக பாவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் அ.வேணுகோபால், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சீனி வாசன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், திங்கள் கிழமை தோறும் மக்கள் குறை தீர் கூட்டம், மாத இறுதியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகியவற்றை வழக்கம்போல தொடர்ந்து நடத்த வேண்டும். கடந்த டிசம்பர், ஜனவரி மாதங் களில் பெய்த தொடர் மழை யால் 33 சதவீதம் மகசூல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணத் தொகையும், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in