

கரூர் மாவட்டம் விஸ்வநாதபுரி யைச் சேர்ந்தவர் வசந்த குமார்(25). க.பரமத்தி ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவர், சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக தனிப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று அவர் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், வீட்டில் சாராய ஊறல் இருப்பது கண்டறியப் பட்டது. இதுதொடர்பாக, வசந்தகுமார், மோகன்ராஜ்(22) ஆகியோரை க.பரமத்தி போலீ ஸார் கைது செய்தனர்.