Published : 05 Jul 2021 03:15 AM
Last Updated : 05 Jul 2021 03:15 AM

காட்பாடி தொழிற்கல்வி ஆசிரியருக்கு விருது :

பல்வேறு துறையில் சிறந்த சேவை செய்து வரும் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, வேலூர் ரோட்டரி சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2020-21-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி வேலூரில் நடைபெற்றது.

வேலூர் ரோட்டரி சங்கத் தலைவர் ஜோசப்அன்னையா தலைமை வகித்தார். சங்கச்செயலாளர் சந்துரு வரவேற்றார். வேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் அங்குலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2020-21-ம் ஆண்டில் சிறப்பான கல்வி சேவை செய்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜார்த்தனுக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தொழிற் சேவை ஆலோசகர் கண்ணன், வேலூர் தொழிற் சேவை இயக்குநர் பீமாராவ், காட்பாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணி, காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்க துணைத்தலைவர் சீனிவாசன், செயலாளர் சிவவடிவு, பொருளாளர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x