Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM

நிலக்கோட்டை மார்க்கெட்டில் குவிந்த மல்லிகை பூக்கள் : வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைப்பு

நிலக்கோட்டை

நிலக்கோட்டை பகுதியில் மல்லிகைப் பூ விளைச்சல் அதிகரித்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் விற்பனை இல்லாததால் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

திண்டுக்கல், நிலக்கோட்டை, செம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக மலர் சாகுபடி செய்ய ப்படுகிறது. நிலக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் அதிகபட்சம் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகையான மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் மூன்றாயிரம் ஏக்கர் பரப்பில் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஒரு மாதத்துக்கும் மேலாகப் பூக்கள் வரத்து இருந்தாலும் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக விற்பனை மிகக் குறைவாகவே உள்ளது.

தற்போது மல்லிகை சாகு படிக்கேற்ப மழையின்றி அளவான வெயில் என சீதோஷ்ண நிலை நிலவுவதால் செடிகளில் பூக்கள் அதிகம் பூக்கத் தொடங்கியுள்ளன. ஒரு ஏக்கருக்கு 150 கிலோ முதல் 200 கிலோ வரை பூக்களை விவசாயிகள் அறுவடை செய் கின்றனர்.

இதனால் திண்டுக்கல், நிலக் கோட்டை நகரங்களில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூக்கள் குவித்து வைக்கப்பட்டு மொத்தமாக விற் பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகள் குறைந்ததால் பூக்கள் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளன. மீதம் உள்ள அதிப்படியான பூக்கள் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது.

இது குறித்து பூ ஏற்றுமதியாளர் முருகேசன் கூறியதாவது:

நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் கிலோ மல்லிகைப் பூக்களை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகி ன்றனர். பூ வியாபாரிகள் வாங்கிச் சென்றதுபோக மீதம் உள்ள மல்லிகைப் பூக்களை நிலக்கோட்டை, மேட்டுப் பாளையம், மருதூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் செயல்படும் தனியார் வாசனைத் திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கிலோ மல்லிகைப் பூக்கள் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரும் நாட்களில் பூக்கள் வரத்து அதிகரிக்கும் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக அளவில் மல்லிகைப் பூக்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x