Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM

ஜூலை 10-ல் தேசிய மக்கள் நீதிமன்றம் :

ராமநாதபுரம் மாவட்ட அளவில் அனைத்து நீதிமன்றங்களிலும் ஜூலை 10-ல் தேசிய மக்கள் (லோக் அதாலத்) நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் கூறியதாவது:

மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவுப்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) ஜூலை 10-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 அமர்வுகளில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சிகள் எடுக்கப்படும். இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு, காசோலை மோசடி, உரிமையியல், குடும்பப் பிரச்சினை, சமரச குற்ற வழக்குகளுக்குத் தீர்வு காணப்படும் என முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x