காரியாபட்டியில் முதியவரிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி :

காரியாபட்டியில் முதியவரிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி :
Updated on
1 min read

காரியாபட்டியில் முதியவரிடமிருந்து ரூ.3 லட்சத்தை முகக் கவசம் அணிந்த 2 பேர் பறித்துச்சென்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள மேலஅழகியநல்லூரைச் சேர்ந்தவர் சொக்கையன் (72). காரியாபட்டியில் உள்ள அரசு வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ.4 லட்சத்தை நேற்று எடுத்துள்ளார். பின்னர் பணப்பையுடன் வங்கியிலிருந்து வெளியே வந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த முகக் கவசம் அணிந்த 2 இளைஞர்கள், திடீரென சொக்கையன் கையிலிருந்த பணப் பையை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்த சொக்கையன் பையை விடாமல் இறுக்கிப் பிடித்தார். அப்போது ரூ.1 லட்சம் கீழே விழுந்தது. எனினும், மீதம் ரூ.3 லட்சம் இருந்த பையுடன் இளைஞர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சொக்கையன் அளித்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in