Published : 03 Jul 2021 03:13 AM
Last Updated : 03 Jul 2021 03:13 AM
மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளை பதிவாளரிடம் (நீதி) அளித்த மனு:
மதுரை ஆயுதப்படை குடியிருப்பில் இயங்கிவந்த இதயம் அறக்கட்டளை நிர்வாகி சிவகுமார், கரோனா கால சூழ் நிலையைத் தவறாகப் பயன் படுத்தி குழந்தைகள் கரோனா பாதிப்பால் இறந்ததாக போலி ஆவணம் தயாரித்து அந்த குழந்தைகளை தனி நபர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்தக் குழந்தை விற்பனையை மருத்துவம் சார்ந்த தீவிர குற்றமாகக் கருத வேண்டும்.
சிவகுமார் பெயரளவில் முதியோர் இல்லத்தை நடத்தி உயர் அதிகாரிகள், காவல் அதிகாரிகளை நம்ப வைத்து மாநில அரசிடம் இருந்து விருது பெற்றுள்ளார். முதியோர், நலி வடைந்தோர், ஆதரவற்ற பெண்கள் மீட்பு மையம் என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தை களைக் கடத்தி விற்பனை செய் துள்ளனர். இதில் பலருக்கு தொடர்புள்ளது.
காப்பகப் பதிவேடுகளில் 18 குழந்தைகள் இருப்பதாக குறிப் பிடப்பட்டுள்ளது. தற்போது இரு குழந்தைகள் மட்டும் இருந்ததாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. மீத முள்ள 16 குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. மதுரை குழந்தைகள் கடத்தல் விவகாரத்தை உள்ளூர் போலீஸார் விசாரிப்பதில் சிரமம் உள்ளது. எனவே இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து உத்தரவுகளைப் பிறப் பிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT