தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மணியன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் புனிதன், ஜீவா, விவசாயிகள் சங்க ஒருங்கிணைக் கப்பட்ட மாவட்டத் தலைவர் ஜெகநாதன், மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, திருமானூர், தா.பழூர் நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. எனவே, இனியும் தாமதப்படுத்தாமல் இந்த நெல் மூட்டைகளை விரைந்து அரைவைக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in