Published : 30 Jun 2021 03:14 AM
Last Updated : 30 Jun 2021 03:14 AM

அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகைஎஸ்.பி. வீ.பாஸ்கரன் வழங்கினார் :

அதிக மதிப்பெண் பெற்ற காவல்துறையைச் சேர்ந்த ஒருவரின் மகளுக்கு ஊக்கத் தொகை வழங்கிய காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன்.

மதுரை தமிழகத்தில் ஆண்டுதோறும் 10-வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் காவல்துறை மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு காவலர் சேம நல நிதியில் இருந்து குறிப்பிட்ட அளவு ஊக்கத் தொகை, சான் றிதழ் வழங்கப்படுகிறது.

இதன்படி 2019-2020-ல் 10, பிளஸ்-2-வில் அதிக மதிப்பெ ண்கள் பெற்ற மதுரை மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த 14 பேருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் எஸ்பி வீ.பாஸ்கரன், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘‘ஊக்கத் தொகை பெறுவோர் நன்றாகப் படித்து, சமுதாயத்தில் நல்ல குடிமகன்களாக வர வேண்டும். பெற்றோருக்கும் நல்ல பெயர் எடுத்துத் தரவேண்டும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x