

திருச்சி: மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மொத்தம் 688 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் 59, கரூரில் 35, மயிலாடுதுறையில் 37, நாகையில் 32, பெரம்பலூரில் 20, புதுக்கோட்டையில் 71, தஞ்சாவூரில் 215, திருவாரூரில் 49, திருச்சியில் 170 என மொத்தம் 688 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் அரியலூர் 1, நாகை 3, பெரம்பலூர், திருவாரூர், திருச்சி தலா 2, புதுக்கோட்டை 4 என 14 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 760 பரிசோதனை முடிவுகளில் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.