வருவாய் ஈட்டும் நபர் கரோனாவால் உயிரிழப்பா? - ‘ஸ்மைல்’திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி :

வருவாய் ஈட்டும் நபர் கரோனாவால் உயிரிழப்பா?   -  ‘ஸ்மைல்’திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கரோனா பாதிப்பால் உயிரிழந்திருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ‘SMILE’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம்வட்டி விகிதத்தில் கடன் தொகைவழங்கப்படும். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கரோனா வைரஸால் உயிரிழந்தார் என்பதற்கான ஆவணங்களுடன் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளதென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் அலுவலகத்தை நேரடியாக அல்லது 9710264879 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ஆதிதிராவிட மக்களுக்கு உதவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in