ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது :

ஊராட்சி செயலாளர் தேவி.
ஊராட்சி செயலாளர் தேவி.
Updated on
1 min read

செங்கம் அருகே துப்புரவு பணியாளரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகாயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் இந்திரா. இவருக்கு, நிலுவைத் தொகை ரூ.25 ஆயிரம் வந்துள்ளது. அந்த தொகையை வழங்க ஊராட்சி செயலாளர் தேவி, இந்திராவிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனை கொடுக்க விரும்பாத இந்திரா தி.மலை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். அவர்களது அறிவுரையின் பேரில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து நேற்று வீட்டுக்கு திரும்பும் வழியில், இந்திராவிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை தேவி பெற்றுக்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் அருள் பிரசாத், மைதிலி மற்றும் அன்பழகன் தலைமையிலான காவல்துறையினர், லஞ்சம் வாங்கிய தேவியை கையும் களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தேவியை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட ரூ.5 ஆயிரத் தையும் பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in