ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் கொலை :

ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் கொலை :
Updated on
1 min read

பெரம்பலூர் கோனேரிபாளையத் தைச் சேர்ந்தவர் கருப்பையா(65). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி பெரியம்மாள். இவர்களது மகன் கார்த்திக்(35). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவரது மனைவி ரம்யா, தற்போது அதே ஊரில் உள்ள தனது தந்தை பழனிமுத்து(53) வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கருப்பையா, கோனேரிபாளையத்தில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை விற்க முடிவு செய்து, அண்மையில் ஒருவரிடம் முன்பணம் வாங்கியுள்ளார். இதையறிந்த ரம்யாவின் தந்தை பழனிமுத்து, தனது மகள் ரம்யா பெயரில் அந்த நிலத்தை எழுதிவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று ஏற்பட்ட தகராறில் கருப்பை யாவை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு பழனி முத்து தப்பி ஓடிவிட்டார். இதுகு றித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து பழனி முத்துவை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in