இரு சக்கர வாகனம் திருடியவர் கைது :

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது :
Updated on
1 min read

ஆற்காடு அருகே வாகன சோதனையில் இரு சக்கர வாகனம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை - ஆற்காடு மேம்பாலம் அருகே ராணிப் பேட்டை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாக னத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும், அவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ரஹீம்(25) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து ரஹீமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in