Published : 25 Jun 2021 03:14 AM
Last Updated : 25 Jun 2021 03:14 AM

மின்சாரம் பாய்ந்து தாய், குழந்தை உயிரிழப்பு :

நாமக்கல்

ராசிபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து தாய், ஒன்றரை வயது மகன் இருவரும் உயிரிழந்தனர்.

ராசிபுரம் அருகே கட்டநாச்சம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரியா (28). அவர் நேற்று மதியம் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். ஈரத்தை உலர வைப்பதற்காக வீட்டில் இருந்த டேபிள் ஃபேனை போட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பிரியாவின் ஒன்றரை வயது மகன் முகுந்தன் ஃபேனை தொட்டுள்ளார்.

ஃபேனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சிறுவனின் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. மகனின் அலறல் சத்தம் கேட்டு பிரியா அவரை காப்பற்ற முயன்றுள்ளார். அப்போது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x